Wednesday, August 10, 2011

பூண்டு



மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.





பூண்டு மருத்துவக் குணங்கள் மிக்க நிறைந்தது. இது இதயநோய், கான்சர் போன்ற வியாதிகள் வராமல் தடுக்க வல்லது. உயர் இரத்த அழுத்தம், தீயக்கொழுப்பு ஆகியவற்றைக் குறைக்கக் கூடியது.

இரத்தத்தை இளக்கி, இரத்தக்கட்டி ஏற்படுவதை தடுக்கும் சகதி வாய்ந்தது. இதனால், உடலின் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இரத்த ஓட்டம் சீராக இருந்தால், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படாது.

இதில் மக்னீசியம், வைட்டமின் B6, வைட்டமின் C மற்றும் செலினியம் நிறைந்துக்காணப்படுகிறது. உடலில் ஏற்படும் புண், கட்டி போன்றவற்றை ஆற்றுப்படுத்த உதவுகிறது.

ஆனால், மதக்கட்டுப்பாடு (உணர்வைத் தூண்டுவதால், சில மதங்களில், பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை உணவில் சேர்க்கக் கூடாது என்று கட்டுபாடு உண்டு), மற்றும் இதன் வாடையினால், சிலர் இதை உண்பதில்லை.

உங்களுக்கு எந்த விதமான் கட்டுபாடோ அல்லது பூண்டின் மீது வெறுப்போ இல்லையென்றால், தினமும் தவறாது பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால், பல கொடிய நோய்கள் நம்மை அண்டாமல் காத்துக் கொள்ளலாம். 

"வருமுன் காப்போம்".

1 comment:

  1. எந்த மதத்தில் அப்படி ஒரு கட்டுப்பாடு இருக்குங்க அண்ணா

    ReplyDelete